கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த மூக்கண்டப்பள்ளியில் தோப்பம்மா கோவில் அமைந்துள்ளது. அதன் அருகே சாலையோரம் குப்பைகளும், கழிவுகளும் குவிந்து காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க செய்ய வேண்டும்.
-மணி, மூக்கண்டப்பள்ளி, ஓசூர்.