மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள்

Update: 2022-08-12 15:22 GMT
பெங்களூரு நாகரபாவி 12-வது பிளாக் பகுதியில் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் அருகில் அந்த பகுதியினர் குப்பை கழிவுகளை வீசி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் குப்பை கழிவுகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. மேலும், அந்த குப்பைகளை கிளறும் மாடுகள் அவற்றை சாலையில் இழுத்து போடுகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த குப்பை கழிவுகளை அகற்றவும், மீண்டும் அந்த பகுதியில் குப்பைகளை வீசாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்