பள்ளி அருகே குவியும் குப்பைகள்

Update: 2022-08-12 15:17 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே சிகரலஅள்ளியில் பள்ளி அமைந்துள்ளது. அந்த பள்ளி கட்டிடத்தின் அருகே உள்ள கால்வாயில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் மாணவர்கள் கடும் சிரமப்பட்டு பள்ளிக்கு வந்து செல்கின்றனர். அந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து கால்வாயில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அள்ளி தூய்மையாக வைக்க செய்ய வேண்டும்.

-நஞ்சுண்டன், சிகரஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்