சேலம் அழகாபுரம் 5-வது வார்டு பெரியபுதூர் அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் குப்பை தொட்டி இல்லாததால் அந்த பகுதி பொதுமக்கள் சாலையோரம் குப்பையை கொட்டுகின்றனர். பள்ளி அருகே குப்பைகள் குவிந்து கிடப்பதால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. மேலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் மாணவ, மாணவிகள் குப்பைகளை கடந்து செல்லும் போது மூக்கை பிடித்துகொண்டு செல்கின்றனர். இதனால் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த பகுதியில் குப்பை தொட்டி வைத்து தினமும் குப்பைகளை அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வருண்ராஜன், அழகாபுரம், சேலம்.