குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-08-06 09:27 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட குளத்தூரில் இருந்து பறக்கை செல்லும் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சாலையில் செல்லும் பொதுமக்களும், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஜோசப் பிரபு, குளத்தூர். 

மேலும் செய்திகள்