குப்பைகளால் சுகாதார சீர்கேடு

Update: 2022-07-31 17:59 GMT
லால்பேட்டை பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி குப்பைகளை எரிப்பதால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், சுவாச பிரச்சினை ஏற்படுகிறது. எனவே குப்பைகளை சாலையோரத்தில் கொட்டுவதை தடுக்கவும், குப்பை கிடங்கு அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்