குப்பைகள் அகற்றப்படுமா ?

Update: 2023-09-17 17:30 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றங்கரையில் உள்ள படிக்கட்டுதுறை அருகே குடிநீர் மோட்டார் அறை உள்ளது. அதை சுற்றி ஏராளமான பாட்டில்கள் உடைந்து துகள்கள் கிடக்கின்றன. மேலும் குப்பைகளும் உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமியை கரைப்பதற்காக வரும்பொழுது பக்தர்களின் காயம் அடையும் அபாயம் உள்ளது. எனவே இந்த பாட்டில் துகள்களை சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமசாமி, மோகனூர், நாமக்கல்,

மேலும் செய்திகள்