சுகாதார கேடு

Update: 2023-09-06 14:54 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த சிக்கமாரண்டஅள்ளி கிராமத்தில் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டி தீ வைத்து எரிக்கிறார்கள். அதனால் சுகாதார கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தூய்மை பணியாளர்கள் குப்பைகளை எரிக்காமல் தினமும் அள்ளி செல்ல வேண்டும்.

-மணி, சிக்கமாரண்டஅள்ளி.  

மேலும் செய்திகள்