குப்பைகளை எரிக்கலாமா?

Update: 2023-08-20 17:47 GMT

ஏரியூர் அருகே அஜ்ஜனஅள்ளி ஊராட்சி உட்பட்ட மூங்கில் மடுவு அரசு தொடக்கப்பள்ளியின் நுழைவுவாயில் பகுதியில் குப்பை தொட்டிகள் உள்ளன. இதில் கொட்டப்படும் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் தீவைத்து எரிக்கின்றனர். இதனால் பள்ளியின் சுற்றுச்சுவர் சேதமாவதுடன், சாலையில் செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமப்படுகின்றனர். புகைமூட்டத்தின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குப்பை தினமும் எடுத்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

-தண்டபாணி, ஏரியூர்.

மேலும் செய்திகள்