குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-08-09 17:23 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அத்திமுட்லு கிராமத்தில் சாலையோரம் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் காற்று அதிகமாக வீசும் போது குப்பைகள் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மீது விழுகின்றன. மேலும் துர்நாற்றமும் வீசுகிறது. எனவே நகராட்சி அதிகாரிகள் இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?

-கோவிந்தன், அத்தி மூட்லு, தர்மபுரி.

மேலும் செய்திகள்