சேலம் மாநகராட்சி 26-வது வார்டு புதிய பஸ் நிலையம் அருகே அங்கம்மாள் காலனி உள்ளது. சாமிநாதபுரம் செல்லும் வழியில் குப்பைகள் தினமும் அள்ளாததால் அங்கு குப்பைகள் குவிந்து கிடக்கிறது. மேலும் இங்கு நோய் தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை தினமும் அல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-முருகன், அங்கம்மாள் காலனி, சேலம்.