சுகாதார கேடு

Update: 2023-06-25 17:05 GMT

கிருஷ்ணகிரி பழையபேட்டை 4-வது வார்டு அங்காளம்மன் கோவில் பின்புறம் உள்ள பக்கிரிமஸ்தான் தெருவில் 70-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அங்கு சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள திறந்தவெளியில் கடந்த 5 ஆண்டுகளாக மழைநீர் தேங்கி கழிவுநீராக மாறியுள்ளது. இதனால் விஷப்பூச்சிகள் நடமாட்டமும், கொசு உற்பத்தி ஆவதாலும் சுகாதார கேடு ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேங்கி இருக்கும் கழிவுநீரை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சபரீசன், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்