நோய் பரவும் அபாயம்

Update: 2023-06-21 17:35 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கோம்புபள்ளம் ஓடையில் ஓட்டல் கழிவுகள், இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் ஓடையில் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் அடைப்பு ஏற்பட்டு தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே இந்த ஓடையில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ரவி, குமாரபாளையம், நாமக்கல்.

மேலும் செய்திகள்