குப்பைகள் அகற்ற கோரிக்கை

Update: 2023-06-18 17:21 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கும், கரூர் மாவட்டம் வாங்கலுக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட தரைவழி பாலம் உள்ளது. இதில் தினசரி ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் பாலத்தின் இரு ஓரங்களிலும் குப்பைகள் அதிக அளவில் குவிந்து கிடக்கின்றன. காற்று பலமாக அடிக்கும் போது இந்த குப்பைகள் பறந்து இரு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளின் முகத்தில் விழுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. எனவே இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சம்பத்ராஜ், மோகனூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்