பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படுமா?

Update: 2023-06-04 15:43 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி 10-வது வார்டில் கழிவுநீர் கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நிற்கின்றன. இந்த பகுதியில் துர்நாற்றம் வீசப்பட்டு கொசு உற்பத்தி ஆகி நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி பலமுறை பேரூராட்சிக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக இந்த பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்ய பேரூராட்சி ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

-அரவிந்த்அப்பு, மாரண்டஅள்ளி.

மேலும் செய்திகள்