பிளாஸ்டிக் பொருட்கள்

Update: 2023-05-17 09:42 GMT

நீலகிரியில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை சாலையோரம் உள்ள வனப்பகுதியில் வீசிவிட்டு செல்கின்றனர். இதை தின்னும் வனவிலங்குகளுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் சுற்றுச்சூழலும் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே சுற்றுலா பயணிகளிடையே பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை குறைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்