குப்பை தொட்டி வைக்க கோரிக்கை

Update: 2023-05-07 17:37 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் 22-வது வார்டு அம்பேத்கர் நகரில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இங்கு குப்பை தொட்டி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-செல்வம், தாரமங்கலம், சேலம்.

மேலும் செய்திகள்