நோய் பரவும் அபாயம்

Update: 2023-03-26 16:06 GMT

சேலம் சுவர்ணபுரி பெருமாள் கோவில் தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் காலி இடம் உள்ளது. இந்த இடத்தை பொதுமக்கள் கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமகிருஷ்ணன், சேலம்.

மேலும் செய்திகள்