சுகாதார கேடு

Update: 2023-03-26 16:04 GMT

சேலம் மாவட்டம் தலைவாசல் பஸ் நிலையம் அருகில் தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் உள்ளது. இந்த காய்கறி மார்க்கெட் வளாகத்தில் கார்கில் போரில் இறந்த போர்வீரர்கள் நினைவாக நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. அந்த நினைவுதூண் வளாகத்தில் தலைவாசல் தினசரி காய்கறி வியாபாரிகள் குப்பைகளையும், காய்கறி கழிவுகளையும் கொட்டிசெல்கின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் எற்படுகிறது. எனவே அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சுரேஷ், தலைவாசல், சேலம்.

மேலும் செய்திகள்