பிளாஸ்டிக் குப்பைகள்

Update: 2023-03-26 15:51 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் பஸ் நிலையம் அருகே சின்ன ஏரி அமைந்துள்ளது. பஸ் நிலையத்தின் அருகே உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் ஆழ்துளை கிணறுகளுக்கு இந்த ஏரியின் மூலமே நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து நீர் கிடைத்து வருகிறது. இந்த சின்ன ஏரியில் பிளாஸ்டிக் குப்பைகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் ஏரி மாசடைந்து தண்ணீரும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே ஏரியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி மேலும் குப்பைகள் கொட்டப்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தாமோதரன், மத்தூர்.

மேலும் செய்திகள்