சுகாதார கேடு

Update: 2023-03-19 16:55 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பெலமாரனஅள்ளி கிராமத்தில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 25 குழந்தைகள் படித்து வருகின்றனர். அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அரசு மருத்துவமனை, கோவில் உள்ளன. இப்பகுதி மக்கள் பிளாஸ்டிக் குப்பைகளை அங்கன்வாடி மையம் அருகே கொட்டி எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாச கோளாறு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்தோஷ், பாலக்கோடு, தர்மபுரி.

மேலும் செய்திகள்