சுகாதார கேடு

Update: 2023-03-15 17:07 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா அலுவலக வளாகத்தின் வழியாக கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீர் தாலுகா அலுவலக வளாகத்தில் தேங்கி நிற்கிறது. இதனால் வளாகத்தில் கொசுக்கள் உற்பத்தி ஆவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. எனவே அலுவலக வளாகத்தில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அன்பரசு, பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்