குப்பகைளை அகற்ற வேண்டும்

Update: 2023-03-01 16:37 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தளி சாலையில் அந்திவாடியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நாள்தோறும் விளையாடவும், நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்ளவும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் மைதானத்தின் பின்புறம் புதர்களுக்கு மத்தியில் குப்பைகள் கொட்டப்பட்டு குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குப்பைகளை நாள்தோறும் அகற்றி அந்த பகுதியை சுத்தமாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- மல்லேஷ், ஓசூர்.

மேலும் செய்திகள்