சுகாதார கேடு

Update: 2023-02-26 16:34 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சி.எம்.புதூரில் சாலை ஓரத்தில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்படுகிறது. இந்த பள்ளம் சாலையோரம் உள்ளதால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது மேலும் குடிநீர் குழாய் இருக்கும் இடத்தில் தொட்டி கட்டி அதன் மேல் சிமெண்டு சிலாப்புகளால் மூட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சுரேஷ், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்