சுகாதார கேடு

Update: 2023-02-19 17:14 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலூகா அலுவலகத்தில் கீழ் தளம் மற்றும் மேல் தளத்தில் நீண்ட நாட்களாக சுத்தம் செய்யாததால், குப்பைகள் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இங்கு துப்புரவு பணியாளர்கள் யாரும் இல்லாததால் அலுவலகம் முறையாக சுத்தம் செய்யப்படுவதில்லை. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சுகாதார வளாகத்தை முறையாக சுத்தம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜாராம், பாப்பிரெட்டிப்பட்டி, தர்மபுரி.

மேலும் செய்திகள்