சாலையோரம் குப்பை

Update: 2023-02-15 16:36 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பஸ் நிலையம் அருகே சர்வீஸ் ரோடு ஓரத்தில் குப்பைகள் கொட்டிக்கிடக்கின்றன. இதனால் அந்த வழியாக நடந்து செல்வோர் மற்றும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மீது குப்பைகள் காற்றில் பறந்து மேலே விழுகின்றன. இதனால் அந்த வழியாக சென்று வரும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே, அந்த குப்பைக்கூளங்களை நாள்தோறும் அகற்றி, அந்த பகுதியை தூய்மையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

-சங்கர், சூளகிரி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்