தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பைபாஸ் சாலை பெட்ரோல் பங்க் அருகில் அந்த பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் சுகாதர சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றி அங்கு குப்பைகளை கொட்டாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பாலா, பாலக்கோடு, தர்மபுரி.