கள்ளக்குறிச்சி- சங்கராபுரம் செல்லும் சாலையில் கோமுகி ஆற்றுப்பாலம் அருகே குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.