குவிந்துள்ள குப்பைகள்

Update: 2023-02-08 08:11 GMT


ஈரோடு பெரியார்நகர் வேப்பிலை மாரியம்மன் கோவில் அருகே ஏ.பி.சி. ஆஸ்பத்திரி பின்புறம் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. அங்கு தேவையற்ற குப்பைகளை கொண்டு வந்து குவித்து வைத்திருக்கிறார்கள். புல் புதர் மண்டி கிடக்கிறது. அங்கு தேங்கும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் புதராகவும், மறைவிடமாகவும் இருப்பதால் சமூக விரோத செயல்கள் அரங்கேறி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குப்பையை அகற்ற வேண்டும்.


மேலும் செய்திகள்