குப்பைகளால் சுகாதார கேடு

Update: 2023-02-05 17:49 GMT

சேலம் மாவட்டம் பாகல்பட்டி பஞ்சாயத்து ஓம்சக்தி நகர் பகுதியில் சாலை ஓரம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. அங்கு வசிக்கும் பொது மக்கள் வெளியே செல்லும் போது மூக்கை பிடித்து கொண்டு செல்லும் அவல நிலை உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாாடிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-கோவிந்தசாமி, பாகல்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்