பணிகள் விரைந்து முடிக்க வேண்டும்

Update: 2023-02-05 17:40 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பஸ் நிலையத்தில் சாலை விரிவாக்க பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. ஒரு வாரம் தீவிரமாக நடைபெற்ற பணி பின்பு நிறுத்தப்பட்டது. கடந்த ஒரு வாரமாக பஸ் நிலையத்தில் குழி தோண்டப்பட்டு மண் குவியல் மட்டுமே உள்ளது. இதனால் அப்பகுதியல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலை விரிவாக்க பணியை விரைந்து முடிக்க நடடிவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாதேஸ்வரன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்