நோய் பரவும் அபாயம்

Update: 2023-01-25 17:40 GMT

தர்மபுரி மாவட்டம் வெள்ளிசந்தையில் பாலக்கோடு - ஓசூர் மெயின் ரோட்டில் சாலை குறுக்கே உப்பம்பள்ளம் ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் பிக்கனஅள்ளி, ஜக்க சமுத்திரம் ஆகிய 2 ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் கழிவுகள், அழுகிய உணவுகள், கோழி கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் கொட்டுவதால் ஆற்று நீர் மாசுபடுவது மட்டுமின்றி, அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் பன்றிகள் குப்பை கழிவுகளை கிளறுவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆற்றில் குப்பை கொட்டுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்

-ராஜா, வெள்ளிசந்தை, தர்மபுரி.

மேலும் செய்திகள்