ஏரியில் வீசப்பட்ட அரசு குப்பை தொட்டிகள்

Update: 2023-01-22 14:46 GMT

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் ஒன்றியம் சுஞ்சல்நத்தம் ஊராட்சி காமராஜ் பேட்டையில் அரசு சார்பில் வழங்கப்பட்ட குப்பை தொட்டிகள் அங்குள்ள ஏரியில் வீசப்பட்டுள்ளன. தற்போது ஏரியில் தண்ணீர் குறைந்துள்ளதால் குப்பை தொட்டிகள் அனைத்தும் வெளியே தெரிகிறது. பொது மக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட குப்பை தொட்டிகள் ஏரியில் வீசப்பட்டதால் பொது மக்கள் குப்பைகளை சாலையில் கொட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த குப்பை தொட்டிகளை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-தினேஷ், ஏரியூர், தர்மபுரி.

மேலும் செய்திகள்