குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-01-18 14:15 GMT


.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் சோழபுரம் அடுத்து விளந்தகண்டம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் மது பிரியர்கள் மதுவை குடித்துவிட்டு பிளாஸ்டிக் கப்புகள் , காலி மது பாட்டில்கள், தின்பண்டங்கள் ஆகியவற்றை அப்படியே போட்டு செல்கிறார்கள். இதனால் குப்பை கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகழிவுகளை அகற்ற வேண்டும்

பொதுமக்கள், விளந்தகண்டம்.

மேலும் செய்திகள்