சாலையோரம் குப்பைகளை கொட்டலாமா?

Update: 2023-01-11 16:31 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வெள்ளிச்சந்தை சாலையில் சிக்கமாரண்டஅள்ளி ஊராட்சி பகுதியில் சாலை ஓரங்களில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். காற்று அதிகம் வீசும் போது குப்பைகள் சாலை முழுவதும் பரவுகின்றன. அதனால் வாகனத்தில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே சாலை ஓரங்களில் குப்பைத்தொட்டி அமைத்து குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த சிக்கமாரண்டஅள்ளி ஊராட்சி நிர்வாகம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவிசங்கர், மாரண்டஅள்ளி, தர்மபுரி.

மேலும் செய்திகள்