குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-01-01 13:37 GMT

நாகை நீலாயதாட்ச்சியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் உள்ள வாகன நிறுத்துமிடம் பகுதியில் குப்பைகள் அதிகளவில் குவிந்து கிடக்கிறது. இதன்காரணமாக துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும். குவிந்து கிடக்கும் குப்பைகளால் பக்தர்கள் மூக்கை மூடிய படி அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்