குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-12-25 17:32 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அடுத்த அணியாபுரம் பஸ் நிலையத்தில் இருந்து தோளூர் செல்லும் சாலையில் அணியாபுரத்தில் உள்ள காலனி பகுதியில் சாலையோரத்தில் குப்பை கொட்டி கிடக்கிறது. அதனால் துர்நாற்றம் வீசுகிறது. அதுமட்டுமின்றி பலமாக காற்று வீசும் போது காற்றில் குப்பைகள் பறந்து வாகனத்தில் செல்பவர்கள் மீது கண்களில் பட்டு விடுவதால், சாலையில் செல்லும் பயணிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறையினால் குப்பையை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அன்பழகன், லத்துவாடி, நாமக்கல்.

மேலும் செய்திகள்