சுகாதார சீர்கேடு

Update: 2022-12-25 17:29 GMT

சேலம் நெடுஞ்சாலை நகர் கங்கை தெருவில் சாக்கடை கால்வாய் கழிவுகளை எடுத்து சாலையின் ஓரத்தில் குவியல், குவியலாக அப்படியே போட்டுவிட்டு மாநகராட்சி ஊழியர்கள் செல்கிறார்கள். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாக்கடை கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-உஷா, நெடுஞ்சாலை நகர், சேலம்.

மேலும் செய்திகள்