தேங்கி கிடக்கும் குப்பைகள்

Update: 2022-12-07 15:52 GMT
பழனி முருகன் கோவிலுக்கு தற்போது அய்யப்ப பக்தர்கள் அதிகமாக சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்நிலையில் அடிவாரம் மற்றும் கிரிவீகளில் உள்ள ஓட்டல் மற்றும் பழக்கடைக்காரர்கள் சேகரமாகும் குப்பைகளை சாலையோரங்களில் ஆங்காங்கே கொட்டுகின்றனர். அவை முறையாக அகற்றப்படாமல் உள்ளதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலம் என்பதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்