தொற்று நோய் பரவும் அபாயம்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா விசலூர் ஊராட்சி பத்தம்கிராமத்தில் போதிய வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் இந்த பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மழை நீருடன் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தரங்கம்பாடி, பொதுமக்கள்