பள்ளி அருகில் விஷ பூச்சிகள் நடமாட்டம்

Update: 2022-12-04 17:44 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அரசு மருத்துவமனை அருகில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளியின் பின்புறம் அதிக அளவில் செடி, கொடிகள் வளர்ந்து காட்சி அளிக்கிறது. அதனால் கொசுக்கள், விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து செடி, கொடிகளை அகற்ற வேண்டும்.

-ராசாப்பன், மோகனூர்.

மேலும் செய்திகள்