சுகாதார கேடு

Update: 2022-11-27 13:05 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் காட்டேரி ஊராட்சி அனுமன் தீர்த்தம் தென்பெண்ணையாற்றின் கரையோரம் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை சிலர் கொட்டி வருகின்றனர். இதனால் ஆற்றில் குளிக்கும் பக்தர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. அங்கு பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளதால் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. எனவே தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் குப்பைகள் கொட்டுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மதியழகன், காட்டேரி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்