செடி, கொடிகள் அகற்றப்படுமா?

Update: 2022-11-23 17:01 GMT

கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிளை சிறைச்சாலை, தீயணைப்பு நிலையம் ஆகிய அலுவலகங்கள் அருகருகே செயல்பட்டு வருகிறது. மக்கள் அதிக அளவில் வந்து போகும் இடமாகவும் உள்ளது. அந்த பகுதியில் பழுதடைந்த வாகனங்கள், செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சி அளிப்பதால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

--சேகர், கிஷ்ணகிரி.

மேலும் செய்திகள்