சாலையோரம் குப்பைகளை கொட்டலாமா?

Update: 2022-11-23 16:51 GMT

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பிக்கனஅள்ளி ஊராட்சி வெள்ளிசந்தையில் பாலக்கோடு- ராயக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. சாலையோரம் உள்ள சாக்கடை கால்வாயில் கோழி கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் அதிகம் வீசுகிறது. இதனால் சுகாதார கேடும் ஏற்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாக்கடை கால்வாயில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தவும், கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணன், வெள்ளிசந்தை, தர்மபுரி.

மேலும் செய்திகள்