தொற்று நோய் பரவும் அபாயம்

Update: 2022-11-23 15:02 GMT


கூத்தாநல்லூர் பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித்திரிகின்றன. சாலையில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை தின்பதற்காக சாலையின் குறுக்கே சென்று வருகின்றன. மேலும் விவசாய பகுதிகளில் பன்றிகள் புகுந்து விளைப்பொருட்களை சேதப்படுத்திவிடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. மேலும், சாலையில் கூட்டமாக சுற்றித்திரியும் பன்றிகளால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிவிடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுதமக்கள் கூத்தாநல்லூர்

மேலும் செய்திகள்