சுகாதார சீர்கேடு

Update: 2022-11-13 16:17 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் நகராட்சிக்கு உட்பட்ட பெரியாண்டிச்சி அம்மன் கோவில் பகுதியில் உள்ள குப்பை தொட்டியில் குப்பைகளை போட்டு குப்பை தொட்டிக்கு தீ வைத்து துப்புரவு பணியாளர்கள் எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் அதிக புகைமூட்டம் ஏற்படுகிறது. இந்த சாலை வழியே செல்லும் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இப்பகுதியில் குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- தமிழ்ச்செல்வி, பென்னாகரம், தர்மபுரி.

மேலும் செய்திகள்