சுகாதார சீர்கேடு

Update: 2022-11-06 15:53 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பஸ் நிலையம் அருகில் உள்ள பரசன் ஏரியில் இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் அந்த சாலை வழியே நடந்து செல்வோருக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இறைச்சி கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுவதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அண்ணாமலை, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்