குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-10-30 16:34 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா காமலாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.சி. செட்டிப்பட்டி அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளிக்கு பின்புறம் பல மாதங்களாக குப்பைகள் தேங்கி காட்சியளிக்கிறது. இதனால் அங்கு கொசுக்கள் உற்பத்தியாகி, பள்ளி மாணவர்களுக்கு டெங்கு, மலோியா போன்ற நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கேசவன், ஓமலூர், சேலம்.

மேலும் செய்திகள்