சாலையோரம் குவியும் குப்பைகள்

Update: 2022-10-26 16:05 GMT

தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சி பகுதிகளில் சேகரிக்கும் குப்பைகள் மற்றும் கழிவுகளை குப்பை கிடங்கில் கொண்டு போய் கொட்டாமல் ஏற்காடு செல்லும் சாலை ஓரங்களில் கொட்டுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அங்கு துர்நாற்றம் வீசி பொதுமக்கள் கடுமையாக காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி பேரூராட்சி நிர்வாகம் இந்த குப்பைகளை அகற்றி குப்பை கிடங்கில் கொட்ட நடவடிக்கை எடுப்பார்களா?

-பழனிதுரை, பொம்மிடி, தர்மபுரி.

மேலும் செய்திகள்