நோய் பரவும் அபாயம்

Update: 2022-10-23 16:14 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா எஸ்.வாழவந்தி செல்லாண்டியம்மன் கோவில் முன்பு தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் இந்த பகுதியில் கொசு உற்பத்தி ஆகி நோய் பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. மழை காலங்களில் அடிக்கடி இதுபோல் தண்ணீர் தேங்குவதால் சாலையும் சேதமாகிறது. எனவே இந்த தண்ணீரை அகற்றி, தண்ணீர் தேங்காதவாறு சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சிவா, மோகனூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்